×

தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை எச்சரிக்கை!!

டெல்லி : தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். வழக்கமான வெப்பத்தைவிட அதிகம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது. கர்நாடகாவின் வடக்கு பகுதியில் இன்று முதல் ஏப்.6 வரை வெப்ப அலை வீசும் என்றும் ஆந்திர வட கடலோர மாவட்டங்கள், ராயலசீமா உள்ளிட்ட பகுதிகளில் ஏப்.4- 8 வரை வெப்ப அலை தாக்கம் அதிகம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட், மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை முதல் ஏப்.6-வரை வெப்ப அலை வீசும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : India Meteorological Department ,Tamil Nadu ,Delhi ,Karnataka ,
× RELATED தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 8...